சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கை வரும்:மத்திய வங்கி ஆளுநர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிககையிலே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் சில சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைகளின் செயல்திறன் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், சமீபத்திய மின்சாரக் கட்டண உயர்வைச் சேர்த்த பிறகும், மொத்தப் பணவீக்கம் 65 சதவீதத்தைத் தாண்டாது என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இதேவேளை இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு பிரிவின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஜானக எதிரிசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...