சவூதி, சீனா உள்ளிட்ட 24 வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கை பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம்!

Date:

இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இவ்வாறான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, உரிய முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, 6 வாரங்களில் இந்த நடவடிக்கையை நிறைவு செய்யும் என எரிசக்தி அமைச்சர்  டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...