சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு!

Date:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

ஜி.எஸ்.பி , சர்வதேச நாணய நிதியம்,மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு  ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இதனை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...