சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு!

Date:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

ஜி.எஸ்.பி , சர்வதேச நாணய நிதியம்,மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு  ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இதனை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...