(File Photo)
பொது போக்குவரத்திற்காக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர், சீனாவினால் கடனுதவி அடிப்படையில் பஸ்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குறைந்தது 100 பஸ்கள் பயன்படுத்தப்படும் எனவும் சீனாவில் இரண்டு நிறுவனங்களுடன் மூன்று மாதங்களில் தொடங்கலாம்.
அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தேவையான அறிவிப்பை நாங்கள் வழங்கியுள்ளோம்.
அந்த பஸ்கள் இலங்கை உத்தரவாதத்தின் பேரில் கடன் அடிப்படையில் எங்களுக்கு வழங்கப்படும்.