சீனாவை தாக்கும் புதிய வைரஸ் ‘லாங்யா’: 53 பேர் பாதிப்பு

Date:

கிழக்கு சீனாவில் ‘லாங்யா’ வைரஸ் பரவி வருவதாகவும், இன்றைய தினம் (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘லாங்யா’ என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ். இந்த வைரஸுக்கு மருந்தோ தடுப்பூசியோ உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

‘கொவிட்-19’ புதிய கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘லாங்யா’ வைரஸ் பரவுவது சீனாவில் பதிவாகியுள்ளது.

‘கொவிட்-19’ வைரஸ் 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானில் தொடங்கியது.

சீனாவின் கிழக்கே ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் ‘லாங்யா’ வைரஸ் பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிக காய்ச்சல், சோர்வு, இருமல், உணவின் மீது வெறுப்பு, தசைவலி, உடல்நலக்குறைவு, வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
மேலும் உடலில் ரத்த தட்டுக்கள் குறையும்.

கல்லீரலையும் சிறுநீரகத்தையும் செயலிழக்கச் செய்யக்கூடியது ‘லாங்யா’ வைரஸ் காணப்படுகின்றது.

தற்போது உலகம் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து கவலையில் இருக்கும் நிலையில், சீனாவின் ஷாண்டோங் மற்றும் ஹெனான் ஆகிய இரு மாகாணங்களிலும் ‘லாங்யா’ நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்த வைரஸின் மரபணு வரிசைமுறை மற்றும் நோய்த்தொற்று வைரஸ் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த உள்நாட்டு ஆய்வகங்களுக்கான தரப்படுத்தப்பட்ட செயல்முறையை விரைவில் நிறுவவிருப்பதாக CDC துணை இயக்குனர்-ஜெனரல் சுவாங் ஜென்-ஹ்சியாங் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...