சுமார் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும்: லக்ஷ்மன்

Date:

கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக நாற்பது அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனியார் மயமாக்கல் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது எதிர்க்கட்சிகள் தேவையான ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் திறன் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது எனவும் அதற்காக அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இது ராஜபக்ஷ மக்களின் குப்பைகளைக் கழுவும் குப்பை வண்டி என்பதால் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியமில்லை எனவும்  லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...