ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தவர்களின் நடத்தையால் நாட்டிற்கு சர்வதேச அளவில் அவப்பெயர்:கமல் குணரத்ன

Date:

ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக இலங்கை சர்வதேச சமூகத்தின் முன் பெரும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குடிமக்கள் சட்டத்தை கையில் எடுப்பது குறித்தும் பாதுகாப்புச் செயலாளர் தனது கருத்தை தெரிவித்தார்.

எந்தவொரு நபரோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...