ஜனாதிபதி மாளிகையில் சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி தேவை! (படங்கள்)

Date:

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக பிரவேசித்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சி.சி.டி.வி. இதுவரை அடையாளம் காணப்படாத 32 சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

071-8591559 / 071-8085585 / 011-2391358 / 1997

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...