ஜெஹான் அப்புஹாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார்!

Date:

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இதன்போது, அவரிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அணியிலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமி தொடர்பில் நேற்று (ஆகஸ்ட் 21) பிற்பகல் வரை பொலிஸாரால் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக, நீதிமன்றத்தில் பொலிஸார் உண்மைகளை தெரிவித்ததையடுத்து, ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டிற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Popular

More like this
Related

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...