ஜெஹான் அப்புஹாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார்!

Date:

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இதன்போது, அவரிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அணியிலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமி தொடர்பில் நேற்று (ஆகஸ்ட் 21) பிற்பகல் வரை பொலிஸாரால் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக, நீதிமன்றத்தில் பொலிஸார் உண்மைகளை தெரிவித்ததையடுத்து, ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டிற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...