தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான டீசல் கையிருப்பு உரிய முறையில் கிடைத்தால் மட்டுமே நாளை தனியார் பேருந்துகளை இயக்க முடியும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச டிப்போ மூலம் டீசல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
எவ்வாறாயினும், டிப்போக்களினால் எரிபொருள் வழங்கப்படுவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று தேவையான அளவு டீசல் கிடைக்காவிட்டால் நாளை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியாது என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இ.போ.ச டிப்போவின் டீசல் விநியோகமும் தற்போது செய்யப்படுவதில்லை என அதன் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.
தனியார் பேருந்துகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு டிப்போ டீசல் வழங்காமைக்கான காரணம் ஆர்டர் செய்யப்பட்ட டீசல் டிப்போவில் இதுவரை கிடைக்கவில்லை என அதன் பிரதிப் பொது முகாமையாளர் ரன் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாளைய தினம் இ.போ.ச பஸ்கள் வழமையாக இயங்குவதற்கு தேவையான டீசல் கையிருப்பு லங்காம டிப்போவில் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.