நாளைய தினம் 90வீத தனியார் பஸ்கள் இயக்கப்படும்: கெமுனு

Date:

எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதால், குறைந்தது 90வீத தனியார் பஸ்கள் நாளை (15) நாடளாவிய ரீதியில் இயங்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் 10,000 முதல் 12,000 பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹக்மன, தெனிய, திக்வெல்ல, ஹம்பாந்தோட்டை, மித்தெனிய, சூரியவௌ, திஸ்ஸமஹாராமய, பெலியஅத்த போன்ற பல கிராமப்புறங்களில் பேருந்துகளை இயக்குவது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக கெமுனு தெரிவித்தார்.

எரிபொருள் பெறுவதற்கு 40 கிலோமீற்றர் தூரம்  செல்ல வேண்டியிருப்பதால் இப்பகுதிகளுக்கு ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

‘மேல் மாகாணத்தில் பாடசாலை பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மற்ற பகுதிகளில், பாடசாலைகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில், அந்த பகுதியில் உள்ள பாடசாலைகள் சாதாரண கட்டணத்தில் சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...