பல்கலைகழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை தாக்குதல்!

Date:

பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது  கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் ஆரம்பமாகியது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தவும், கைது செய்யப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகாமையில் பொலிஸார், கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் நீர் பீரங்கிகளும் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...