2023 ஆம் ஆண்டிற்கான பள்ளி சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
அதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்கான சீருடைகள் 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவனைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசால் சீனக்குடியரசுக்கு விண்ணப்பிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணித் தேவையின் ஒரு பகுதியை இலவசமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சீனக்குடியரசால் வழங்கப்படும் சீருடைத்துணிக்கு மேலதிகமான தேவையை உள்ளுர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.