பாடசாலை சீருடைகள் சீனாவிலிருந்து இறக்குமதி: அமைச்சரவை அங்கீகாரம்

Date:

2023 ஆம் ஆண்டிற்கான பள்ளி சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

அதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்கான சீருடைகள் 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவனைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசால் சீனக்குடியரசுக்கு விண்ணப்பிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணித் தேவையின் ஒரு பகுதியை இலவசமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சீனக்குடியரசால் வழங்கப்படும் சீருடைத்துணிக்கு மேலதிகமான தேவையை உள்ளுர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...