புதிய அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 09 மனுக்கள்!

Date:

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட ஒன்பது பேரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் தற்போதைய அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது என அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...