புதிய அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 09 மனுக்கள்!

Date:

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட ஒன்பது பேரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் தற்போதைய அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது என அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளன.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...