பெத்தும் கேர்னருக்கு பிணை:வெளிநாடு செல்வதற்கு தடை!

Date:

சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று (4) உத்தரவிட்டார்.

அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக ஜூலை 28 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் பத்தரமுல்ல பொல்துவ மண்சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது அவரை இன்று (ஆகஸ்ட் 4) வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9-12 மணிக்குள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...