மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று!

Date:

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று (29) பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றம் இன்று (29) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

விவாதத்துக்கான பிரேரணையை மக்கள் சக்தி கட்சி முன்வைக்கிறது. காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை 70 சதவீதம் உயர்த்த அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அரசுக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (30),  (31), எதிர்வரும் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (30) காலை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை (வரவு செலவுத் திட்ட உரை) சமர்ப்பிக்கவுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்த பின்னர், பாராளுமன்றம் நாளை மறுதினம் (31) வரை ஒத்திவைக்கப்படும். அடுத்த நான்கு மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்

Popular

More like this
Related

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...