முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் சில்வா அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய விசாரணைக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடந்த வாரம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.