மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

Date:

திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடும் பஸ்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பஸ்களை அடையாளம் காண நடமாடும் பரிசோதனை அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணங்களை அறவிடும் சில பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பயணிகளிடம் அறவிடும் மேலதிக பணத்தை மீள செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...