வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஜனாதிபதி, வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பார்: வஜிர

Date:

வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வரித் திருத்தங்களுடன் மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா குறித்து காலி மக்களுக்கு அறிவிக்கும் முகமாக நடைபெற்ற கூட்டத்தில் வஜிர அபிவர்தன இதனைத் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம் திருத்த வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்படுவதாகவும், வீதிகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அல்ல என்றும், உணவு, உடை இல்லாத மக்களுக்கு அரிசி, துணி வாங்குவதற்கான அமைப்பை உருவாக்குவதற்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதாகவும் வஜிர தெரிவித்தார்.

மேலும், போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகளின் தலைமுறை பிறக்கிறதுஇ அந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகஇ, மக்களை அபிவிருத்தி செய்பவர்கள் ஜனாதிபதியின் வரி திருத்தங்களுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, தவிக்கும் குழந்தைகளின் பசியை போக்குவார்கள் என நம்புகிறோம்.

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எவருக்கும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக கனவுகள் இருக்கலாம், ஆனால் இருபது மில்லியன் மக்களின் வாழ்க்கையை வாழ்வதற்கான திட்டமும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன கூறினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...