ஸல்மான் ருஷ்தி தாக்கப்பட்டு வைத்தியசாலையில்!

Date:

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சாத்தானிய வசனங்கள் எனும் நூலை எழுதிய ஸல்மான் ருஷ்தி நியுயோர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வின் போது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்த பிரித்தானியப் பிரஜையான ஸல்மான் ருஷ்தி நேற்று நியுயோர்க் நகர மண்டபமொன்றில் உரையாற்ற முற்படுகையில் ஹாதி மத்தார் என்பவரால் மேடையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அவரது நெஞ்சிலும் வயிற்றிலுமாக கைகளால் குத்தப்பட்ட அவர் சுயநினைவற்ற நிலையில் மேடையில் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து விமான மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். நேற்று வரை அவருக்குச் சுய நினைவு திரும்பவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1980 களில் அவர் எழுதிய சாத்தானிய வசனங்கள் எனும் நூல் இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்வதாக ஈரானின் அப்போதைய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் கொமைனி அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் 10 வருடங்களாக தலைமறைவாகியிருந்தார். முஸ்லிம் உலகின் வெறுப்புக்குள்ளாகியிருந்த இவருக்கு பிரித்தானியா 2007 இல் சேர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஸல்மான் ருஷ்தி மீது தாக்குதல் மேற்கொண்ட நிவ் ஜேர்ஸியைச் சேர்ந்த 24 வயதான ஹாதி மத்தார் தனி நபராகவே செயற்பட்டிருந்கிறார் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள போதிலும் தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

Popular

More like this
Related

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...