இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது!

Date:

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தற்போது 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அண்மைய கணக்கீட்டின்படி, இந்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்  மகிந்த அமரவீரவிடம் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் இலங்கையின் காடுகளில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 142 ஆக இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா, கிரித்தலே மற்றும் பராக்கிரம சமுத்திரத்தில் சுற்றித்திரியும் சுமார் 350 காட்டு யானைகள் காணாமல் போயுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கேட்டறிந்தார்.

மேலும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மின்னேரியா, கிரித்தலே, பராக்கிரம சமுத்திரத்தை சூழவுள்ள காட்டுயானைகள் ஏனைய பிரதேசங்களுக்கு இடம்பெயர்வதால் காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...