எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு பாராளுமன்றில் அஞ்சலி

Date:

பிரிட்டனின் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு சபாசாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதனையடுத்து பிரதமர் குணவர்த்தன அரசாங்கத்தின் இரங்கல் செய்தியை வாசித்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல இரங்கல் செய்தியை வாசித்தார்.

அத்துடன் மகாராணியின் மறைவையொட்டி இன்று முதல் இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...