கேகாலை கோர விபத்து: மேலும் ஒருவர் பலி!

Date:

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்காவது நபராக இன்று ஒருவர் உயிரிழந்தார்.

கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கில்களை செலுத்தியவர்களை கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது
கண்டி நோக்கி சென்ற வேன் எதிர் திசையில் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள்  மீது மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மூன்றில் ஐவர் பயணித்துள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான ஐவரையும் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் மற்றொரு நபர் உயரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நாங்கள்ளையை சேர்ந்த மொஹம்மத் அல்தாப் ஷாதுலி ஆவார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...