கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (03) காலை 08.00 மணி முதல் நாளை (04) அதிகாலை 02.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபை பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் ரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கும் குறித்த காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தளை நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...