கொழும்பு கேக் சென்டரின் 05ஆவது பூர்த்தி விழாவும், கண்காட்சி நிகழ்வும்

Date:

கொழும்பு கேக் சென்டரின் 05 வருட பூர்த்தியை  முன்னிட்டு, கண்காட்சி நிகழ்வும்,  ஆண்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அதற்கமைய இதன் பணிப்பாளர்களான எம்.ரபீக் மற்றும் நுஸ்ரா அஹ்மத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது, கேக் பாடநெறியை பூர்த்தி செய்த மற்றும் ஒரு நாள் பாடநெறியில் கலந்து கொண்ட மாணவர்களின் பல வித்தியாசமான பல வகையான கேக் அலங்காரத்துடன் அண்மையில் கிருலப்பன பெஸ்ட் வெஸ்டேர்ன் எல்யொனில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குறித்த இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக எக்ஸ்போ லங்கா குழு நிறுவனத்தின் பிரதம கணக்காளர் எம்.என்.எம்.நஸீம், நடுவராக விருது பெற்ற கேக் அலங்கரிப்பாளர் புஷ்ப பௌசி, பிரதம அதிதியாக நடிகை திருமதி தினுஷா ஸ்ரீவர்தன,மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து இக் கண்காட்சியினை கண்டுகளித்தனர்.

கேக் பாடநெறியில் கலந்து கொண்டு கேக் அலங்காரம் செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கும் புஷ்ப கௌஷி புள்ளிகளை வழங்கியதோடு இதில் திறமையாக செய்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

-சில்மியா யூசுப்

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...