சீன சிச்சுவான் மாகாணத்தில் நில அதிர்வு: 46 பேர் உயிரிழப்பு!

Date:

சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிச்சுவான் மாகாணத்தில் நேற்று (5) நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

சீனாவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு இது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாரிய அணைக்கட்டுக்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த பிராந்தியத்தை சேர்ந்த 40 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...