சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை குழுக்கள் விழிப்புடன்…!

Date:

(File Photo)

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 26 நிவாரணக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

காலி, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 09 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தேவைக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பில் நிவாரணக் குழுக்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...