நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய 8 பஸ்கள் சீனாவினால் வழங்கிவைப்பு!

Date:

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கா பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வதிகளைக் கொண்ட 8  நடமாடும் ஆய்வுகூட பஸ்கள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் 660 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்த நடமாடும் ஆய்வுகூட பஸ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்தநிலையில் வாகனங்களின் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிறுநீரக நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் சுமார் 500 பேரை பரிசோதிக்க முடியும் என்பதுடன், மாவட்ட மட்டத்திலும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காண முடியும்.

இந்த நடமாடும் ஆய்வுகூட பஸ்களில் சீனாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சுகாதார ஊழியர்கள் பணிபுரிவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...