அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் பரிசோதிக்கப்படும்!

Date:

அடுத்த வாரம் முதல் பாடசாலை புத்தகப் பைகளை பரிசோதிக்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பாடசாலைகளில் பாடசாலைப் பைகளை பரிசோதிக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு தெரியாமல் போதைப் பொருட்களை விநியோகிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...