அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

Date:

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை எதிர்வரும் காலங்களில் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், சில நிறுவனங்களின் சேவைகளை பேணுவதற்கு தேவையில்லாத திணைக்களங்களில் இருந்து ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரி குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நிலவும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சேவையை மேலும் முறையாகவும் திறமையாகவும் உயர் மட்டத்தில் பராமரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் உள்ள  பணியிடங்கள் மற்றும் மிகுதிகளைக் கணக்கிட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சமப்படுத்தப்படும்.

இதேவேளை கடந்த காலங்களில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சுமார்  60,000 அரச ஊழியர்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...