அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

Date:

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை எதிர்வரும் காலங்களில் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், சில நிறுவனங்களின் சேவைகளை பேணுவதற்கு தேவையில்லாத திணைக்களங்களில் இருந்து ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரி குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நிலவும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சேவையை மேலும் முறையாகவும் திறமையாகவும் உயர் மட்டத்தில் பராமரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் உள்ள  பணியிடங்கள் மற்றும் மிகுதிகளைக் கணக்கிட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சமப்படுத்தப்படும்.

இதேவேளை கடந்த காலங்களில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சுமார்  60,000 அரச ஊழியர்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...