ஆசிய வங்கி ஆதரவுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் : ஜனாதிபதி

Date:

உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.

மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர உதவிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியில் பணியாற்றும் நிபுணர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...