இந்திய-இலங்கை ஒத்துழைப்பு எல்லையற்றது’ : இந்திய உயர்ஸ்தானிகர்

Date:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு வானமே எல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) மற்றும் இலங்கைக்கு இடையிலான பங்காளித்துவத்தின் 58வது கொண்டாட்டத்தில் உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த இந்திய-இலங்கை ஒத்துழைப்பில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் (ITEC) முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ITEC வலையமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் 400 புலமைப்பரிசில்களை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...