இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்: பணம் அனுப்பும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டம்

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சுகாதார சேவைத் துறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கையின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த வைத்தியர் சங்கமாக கருதப்படும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை வைத்தியர்களின் வெளிநாட்டுப் பணத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 1000 ஆக இருக்கும் என டாக்டர் ருவான் ஜயசூரிய கூறுகிறார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நோக்கில் வைத்தியர்களை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு சுற்றறிக்கையை வெளியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...