இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்: பணம் அனுப்பும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டம்

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சுகாதார சேவைத் துறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கையின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த வைத்தியர் சங்கமாக கருதப்படும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை வைத்தியர்களின் வெளிநாட்டுப் பணத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 1000 ஆக இருக்கும் என டாக்டர் ருவான் ஜயசூரிய கூறுகிறார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நோக்கில் வைத்தியர்களை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு சுற்றறிக்கையை வெளியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...