இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடமிருந்து செய்தி!

Date:

சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா டுவீட் செய்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில், சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது இலங்கை முன்னோக்கி செல்வதற்கு முக்கியமான ஒரு படியாகும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் ஆகஸ்ட் 31 அன்று உத்தியோகப் பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவான நிதி வசதிகள் வழங்கப்படும்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...