உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் அழைப்பு!

Date:

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்காத குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு காலை இழந்த தந்தை சிறில் காமினி மற்றும் யேசுராஜ் கணேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனிப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நீதிமன்றில் முன்னிலையானார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்காகவும், பாதுகாப்பு அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிமன்றில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...