உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்..!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018 இல் நடத்தப்பட்டு 2022 இல் முடிவடையத் திட்டமிடப்பட்டது, ஆனால் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் அவை 2023 வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட நிலையில், இம்முறை அந்த தொகை எட்டு முதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என நம்பப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில்..!

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர்...

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஈரான்...

எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது...