எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு!

Date:

கம்பஹா, யாகொட புகையிரத கடவையில் கார் ஒன்று கண்டி – கொழும்பு நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் ரயில் பாதையின் குறுக்கே செலுத்தப்பட்டதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா, மேல் யாகொட பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரயிலில் மோதிய கார், ரயிலுடன் யாகொட நிலையத்திற்குள் வந்தபோது, ​​ரயிலுக்கும் யகொட நிலையத்தின் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டது.

குறித்த புகையிரத கடவை யாகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து காரணமாக காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தில் கார் புகுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையின் கீழ் ரயில்களில் சிறிது தாமதம் ஏற்பட்ட போதிலும், தற்போது ரயில் இயக்கம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...