எந்தவொரு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கு ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் இலங்கை பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் திங்கட்கிழமை தெரிவித்தார்.
அதேநேரம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், போராட்டம் நடத்தும் மக்களின் உரிமையை அரசு ஏற்றுக்கொண்டு மதிக்கிறது என்றும் கூறினார்.
ஜனாதிபதி அண்மையில் பல பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப பொலிஸாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும், நாட்டின் சட்டத்தின்படி, எதிர்ப்பு அணிவகுப்பு அல்லது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அசௌகரியத்தை பாதிக்கும் மற்றும் பொது நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் அல்லது போராட்டங்கள் அனுமதிக்கப்படாது என்றும் இது தொடர்பாக அரசாங்கம் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் பதில் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார்.