முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம்!

Date:

மறைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம் இன்று (26) ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு மிகவும்  நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 22ஆவது நினைவு தினம் மற்றும் மறைந்த அமைச்சர் அநுர பண்டாரநாயக்கவின் 14ஆவது நினைவுதினமும் இங்கு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, குமார் வெல்கம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாண்டு பண்டாரநாயக்க, ஜீவன் குமாரதுங்க, பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு  பண்டாரநாயக்கவின் மகள்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க, கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...