எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு பாராளுமன்றில் அஞ்சலி

Date:

பிரிட்டனின் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு சபாசாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதனையடுத்து பிரதமர் குணவர்த்தன அரசாங்கத்தின் இரங்கல் செய்தியை வாசித்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல இரங்கல் செய்தியை வாசித்தார்.

அத்துடன் மகாராணியின் மறைவையொட்டி இன்று முதல் இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...