இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முக்கிய நாடுகளின் தீர்மானம் ஒக்டோபர் 6ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளை (28) ஆகும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா, மொன்டனீக்ரோ மற்றும் போன்ற நாடுகளை உள்ளடக்கிய நாடுகளால் இலங்கை தொடர்பான தீர்மானம் இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய விடயமாக, நல்லிணக்கம் மற்றும் அதன் அனைத்து மக்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதில் உள்ளடங்கிய அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் தீர்மானம் கோரியதுடன், அரசாங்கத்தை மதிக்க ஊக்குவித்துள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதன் ஊடாக உள்ளூராட்சி அதிகார சபைகள், இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உட்பட திறம்பட செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,
இதேவேளை கடந்த காலத்தை கையாள்வதில் ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நீதி வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.