கொழும்பு தொட்டலங்க, காஜிமாவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தற்காலிக குடிசை வீடு ஒன்றில் நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பார்வையிட சென்றுள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் வருகையை அடுத்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் தமது வீடுகளை இழந்த தமக்கு நீதி வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தீயினால் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.