கேகாலை கோர விபத்து: மேலும் ஒருவர் பலி!

Date:

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்காவது நபராக இன்று ஒருவர் உயிரிழந்தார்.

கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கில்களை செலுத்தியவர்களை கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது
கண்டி நோக்கி சென்ற வேன் எதிர் திசையில் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள்  மீது மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மூன்றில் ஐவர் பயணித்துள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான ஐவரையும் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் மற்றொரு நபர் உயரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நாங்கள்ளையை சேர்ந்த மொஹம்மத் அல்தாப் ஷாதுலி ஆவார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...