கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (03) காலை 08.00 மணி முதல் நாளை (04) அதிகாலை 02.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபை பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் ரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கும் குறித்த காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தளை நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்துக்கு இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம் கண்டனம்: உடனடியாக ரத்து செய்யவும், அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.

இஸ்ரேலியர்களுக்கு எதிராக கொடிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு மரண...

மின்னல் தாக்கம் குறித்து அறிவுறுத்து : 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், திருகோணமலை,...

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!

மத்திய கிழக்கு  போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து,...

“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ்...