சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை குழுக்கள் விழிப்புடன்…!

Date:

(File Photo)

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35 கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 26 நிவாரணக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

காலி, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 09 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தேவைக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பில் நிவாரணக் குழுக்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...