சுயேட்சையாக இணைந்த எம்.பி.க்கள் குழுவின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படும்!

Date:

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயேட்சையாக இணைந்த எம்.பி.க்கள் குழுவின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கூட்டணியின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் பெயர் மற்றும் அதன் தலைவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்பட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று உருவாகும் புதிய கூட்டணி இந்த நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் புதிய கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி சித்தாந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதே புதிய கூட்டணியின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...