திரிபோஷ குற்றச்சாட்டுக்கு சுகாதார தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: கெஹலிய மிரட்டல்!

Date:

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன திரிபோஷ மா தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திரிபோஷாவில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

திரிபோஷாவில் ஆபத்தான அளவு அஃப்லாடாக்சின் இருப்பதாக பல சுகாதார சங்கங்கள் குற்றம்சாட்டின.

இதனையடுத்து இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறிய ரம்புக்வெல்ல, தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், நாம் முழுமையான சேதன பசளை பாவனைக்கு மாறிய வேளையில் திரிபோஷ உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பில் பிரச்சினை நிலவியது அதனை நான் மறுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கான திரிபோஷாவுக்கான தட்டுப்பாடானது யுனிசெப்பின் உதவியுடன் அது நிவர்த்திக்கப்பட்டது.

எவ்வாறாயினும், திரிபோஷவில் எஃப்ளொடொஸின் அடங்கியுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என பொறுப்புடன் கூறுகிறேன் எனவும் திரிபோஷவில் நச்சு உள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை எங்களிடம் 14 வகையான அத்தியாவசிய மருந்து வகைகள் போதுமான அளவு இருப்புக்கள் மற்றும் 383 வகையான அத்தியாவசிய மருந்துகளை முகாமைத்துவ மட்டத்தில் வைத்துள்ளோம் என சுகாதார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...