நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வழியை கூறுகிறார் அநுர!

Date:

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாட்டு மக்கள் என அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து போராடினால் இரண்டு மூன்று வருடங்களில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமாயின் மக்களின் ஆணையுடன் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நிறைவேற்றினால் மக்கள் அரசாங்கத்திற்கு ஓரிரு வருடங்களை வழங்குவார்கள் எனவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஆணைப் பெற்று ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அமைப்பது ஆணைக்கு எதிரானது எனவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை,   இடைக்கால வரவு செலவுத் திட்டமும் ஆணைக்கு எதிரான  திட்டம் எனவும், நெருக்கடியில் இருந்து மீள ஆணை தேவை எனவும், தற்போது ஆணை இல்லாத சில மிதக்கும் மனித தூண்கள் வந்து நாட்டை ஆள்வதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு...

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு...

நாளை முதல் வரட்சி வானிலையில் மாற்றம்

நிலவும் வரட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

எரிபொருள் விலை கட்டுப்பாடு: அரசாங்கத்தின் விசேட மானியம் :

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல்...