நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வழியை கூறுகிறார் அநுர!

Date:

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாட்டு மக்கள் என அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து போராடினால் இரண்டு மூன்று வருடங்களில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமாயின் மக்களின் ஆணையுடன் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நிறைவேற்றினால் மக்கள் அரசாங்கத்திற்கு ஓரிரு வருடங்களை வழங்குவார்கள் எனவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஆணைப் பெற்று ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அமைப்பது ஆணைக்கு எதிரானது எனவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை,   இடைக்கால வரவு செலவுத் திட்டமும் ஆணைக்கு எதிரான  திட்டம் எனவும், நெருக்கடியில் இருந்து மீள ஆணை தேவை எனவும், தற்போது ஆணை இல்லாத சில மிதக்கும் மனித தூண்கள் வந்து நாட்டை ஆள்வதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...