பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு: ஜனாதிபதி ரணில் பாகிஸ்தானுக்கு தேவையான ஆதரவு வழங்குவதாக உறுதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பரவலான அழிவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, உயிர் இழப்புகளுக்கு பிரதமர் ஷெரீப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்.

எதிர்பாராத இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் அவர் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த சோதனைக் காலங்களில் இலங்கை ஜனாதிபதியின் கருணை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியமைக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் நன்றி தெரிவித்ததோடு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பாகிஸ்தானில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பாரிய அழிவுகள் குறித்தும் அவருக்கு விளக்கமளித்தார்.

வெள்ளத்தால் மனித உயிர்கள், வாழ்வாதாரங்கள், கால்நடைகள், பயிர்கள், சொத்துக்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.

பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்கள் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை அளிக்கக்கூடிய நிவாரண நிதியை ஸ்தாபித்தல் உட்பட அரசாங்கத்தின் நன்கு ஒருங்கிணைந்த மனிதாபிமானப் பதிலுக்கும் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டினார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...